முகப்பு
விருதுநகர்

சிவகாசி அருகே கருந்திரி  வைத்திருந்தவர்  கைது

சிவகாசி அருகே அனுமதியின்றி கருந்திரி வைத்திருந்தவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 6:17 AM
பகிர்:

சிவகாசி அருகே அனுமதியின்றி கருந்திரி வைத்திருந்தவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
சிவகாசி-எரிச்சநத்தம் சாலையில் எம்.புதுப்பட்டி போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெருமாள்கோயில் அருகே ஒருவர் சாக்குமூட்டையுடன் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்தார்.
போலீஸார் அந்த சாக்குமூட்டையை சோதனையிட்டபோது, அதில் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் 400 குரோஸ் கருந்திரி கட்டுகள் இருந்தன. விசாரணையில் அந்த நபர், எம்.மேட்டுப்பட்டி மேலதெருவைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் குமார் (38) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து, குமாரை கைது செய்து, அவரிடமிருந்த கருந்திரி கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.