விருதுநகர்

விருதுநகரில் மண்டல சதுரங்கப் போட்டி:  திண்டுக்கல் கல்லூரி அணி வெற்றி

DIN

விருதுநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மண்டல அளவிலான சதுரங்கப் போட்டியில் திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரி அணி வெற்றி பெற்றது.
விருதுநகரில் தனியார் பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலை கழகத்திற்கு உள்பட்ட மண்டல அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சதுரங்கப் போட்டியை, கல்லூரித் தலைவர் திருவேங்கட ராமானுஜதாஸ் தொடங்கி வைத்தார். இதில், 20 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 230 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் 6 மாணவ, மாணவிகள் ஒரு குழுவாக பங்கேற்றனர். இந்த போட்டிகளில் திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரி முதலிடம் பெற்றது. திண்டுக்கல் எஸ்பிஎம் பொறியியல் கல்லூரி இரண்டாமிடமும், தேனி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றன. வெற்றி பெற்ற கல்லூரிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT