விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்குள்பட்ட முத்துராமலிங்கபுரம், வேலாயுதபுரம் பகுதிகளில் செப். 24 ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பி.முத்தரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முத்துராமலிங்கபுரம் துணை மின்நிலையத்தில் செப். 24 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான முத்துராமலிங்கபுரம், பரளச்சி, நரிக்குடி, ராமலிங்கா ஆலை மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலும், மேலும் வேலாயுதபுரம் துணை மின்நிலையப் பகுதிகளான வேலாயுதபுரம், வெம்பூர், பந்தல்குடி பரமேஸ்வரி ஆலை ஆகிய பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அன்றைய தினம் மின்விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.