விருதுநகர்

கழிவு நீரோடை மீது கட்டப்பட்டு சேதமடைந்த பாலத்தை சீரமைக்கக் கோரிக்கை

DIN

ராஜபாளையத்தில் கழிவு நீரோடை மீது கட்டப்பட்டு சேதமடைந்த பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் சங்கரன்கோவில் முக்குப் பகுதியில் இருந்து அம்பலப்புளி பஜார் செல்லும் வழியில் உள்ள கழிவு நீரோடை மீது கட்டப்பட்டுள்ள பாலத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் வியாபாரிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். 
சில தினங்களுக்கு முன்பு 
பெய்த மழையினால் பாலத்தில் பள்ளம் விழுந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. 
எனவே நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT