விருதுநகர்

இரு சக்கர வாகனங்கள் திருட்டு: தூத்துக்குடி இளைஞர் கைது

DIN

விருதுநகர் அருகே இரு சக்கர வாகனங்கள் திருடிய தூத்துக்குடியை சேர்ந்த இளைஞரைப்  போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
  விருதுநகர் ஆர்.ஆர். நகர் பகுதியில் வச்சகாரபட்டி காவல் சார்பு ஆய்வாளர் தலைமையில் போலீஸார் வாகன சோதனையில்  ஈடுபட்டனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர், போலீஸாரைக் கண்ட தும் தப்பி ஓட முயற்சித்துள்ளார். இதையடுத்து, அவரை போலீஸார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.    அவர்,  தூத்துக்குடி மாவட்டம் அழகேசபுரத்தை சேர்ந்த குருசாமி மகன் மாரியப்பன் (29) என்பதும்,  அவர் ஓட்டி வந்த வாகனம் தூத்துக்குடியில் திருடியதும் தெரியவந்தது. 
      மேலும் அவர் மற்றொரு இருசக்கர வாகனத்தை திருடி துலுக்கப்பட்டி ரயில் நிலையம் செல்லும் பாதையில் நிறுத்தி இருப்பதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து 2 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்த போலீஸார், மாரியப்பன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT