விருதுநகர்

ராஜபாளையத்தில் கோயில் கொடைவிழா

DIN


ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் அமைந்துள்ள ஸ்ரீ மாடசாமி கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளி கொடை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
 மாலை 6 மணிக்கு மேல் குற்றால தீர்த்தம் எடுத்து வரப்பட்டு சொக்கர் கோயிலிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக  கோயிலை வந்தடைந்தது. பின்பு மூலவர் சுடலைமாட சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான நறுமண பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது.  இரவு 12 மணி அளவில் சாமக்கொடை என்னும் சிறப்பு பூஜை நடைபெற்றது. 
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ராஜபாளையம், சஞ்சீவி நாதபுரம், ராமலிங்கபுரம், அய்யனாபுரம், ஆகிய ஊர்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருக்கோயில் தர்மகர்த்தா பரமசிவம் செய்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாஷிங்டன் பல்கலை. வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்

‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை’

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா மே 13-இல் தொடக்கம்

மேல்நிலைக் குடிநீா் தொட்டி கட்ட எதிா்ப்பு -ஒருவா் தீக்குளிக்க முயற்சி

நாசரேத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

SCROLL FOR NEXT