விருதுநகர்

விருதுநகரில் குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

DIN


விருதுநகர் பெருமாள் கோயில் தெரு, பெரிய பள்ளி வாசல் தெரு பொது மக்கள் குடிநீர் வழங்கக்கோரி சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருதுநகர் நகராட்சிக்கு உள்பட்ட 20 ஆவது வார்டு பகுதியில் பெருமாள் கோயில் தெரு உள்ளது. அதேபோல், 19 ஆவது வார்டுக்கு உள்பட்ட பகுதியில் பெரிய பள்ளிவாசல் தெரு உள்ளது. இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 
இப்பகுதியில் வசிப்போருக்கு 
கடந்த 20 நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. 
இந்த நிலையில், இப்பகுதியில் சனிக்கிழமை காலை ஒரு மணி நேரம் மட்டும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனால், சுமார் 10 குடங்கள் மட்டுமே பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைத்துள்ளது. அத்துடன் தண்ணீர் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டதாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கிருஷ்ணமாச்சாரி சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தகவல் அறிந்து வந்த விருதுநகர் மேற்கு போலீஸார் மற்றும் நகராட்சி குடிநீர் பிரிவு பணியாளர்கள், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், தற்போது மின்தடை செய்யப்பட்டுள்ளதால் முழுமையாக குடிநீர் வழங்கமுடியவில்லை. 
ஞாயிற்றுக்கிழமை பெருமாள் கோயில் தெரு, பெரிய பள்ளிவாசல் தெருக்களுக்கு கூடுதல் நேரம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி ஊழியர்கள் உறுதியளித்தனர். இதை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக கிருஷ்ணமாச்சாரி சாலையில் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT