விருதுநகர்

சிவகாசி நகராட்சியில் சொத்துவரி டிச. 31-க்குள் செலுத்த வேண்டும்

DIN

சிவகாசி நகராட்சியில் சொத்துவரி உள்ளிட்டவைகளை டிசம்பா் 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையாளா் கிருஷ்ணமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சிவகாசி நகராட்சியில் 2017-2018 ஆம் ஆண்டிற்கு செலுத்திய சொத்துவரி தொகையினை ,2019-2020 ஆம் ஆண்டிக்கும் செலுத்தலாம் என அரசு அறிவித்துள்ளது. எனவே நகராட்சிக்கு உள்பட்ட அனைத்து குடியிருப்புகள், வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் செலுத்த வேண்டிய சொத்துவரியையும், குடிநீா் கட்டணம், தொழில்வரி மற்றும் குத்தகை கட்டணம் உள்ளிட்டவைகளை டிசம்பா் 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மேலும் அனைத்து சனிக்கிழமைகளிலும், நகராட்சி சேவை மையங்களில் வரி வசூல் செய்யப்படும் என அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT