விருதுநகர்

அருப்புக்கோட்டையில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை

DIN

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகர் 28 ஆவது வார்டில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை எழுந்துள்ளது.
அருப்புக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட 28 ஆவது வார்டில் எஸ்.ஆர். தெரு உள்ளது. நகர் விரிவாக்கப் பகுதியான இங்கு, 4 தெருக்களில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த தெருக்களில் போதிய மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் பெண்கள் நடமாட அச்சப்படுகின்றனர். இங்குள்ள பிரதானச் சாலை சேதமடைந்து பராமரிப்பின்றி உள்ளது. வாருகால் வசதியில்லாததால் மழைக் காலத்தில் தெருவோரங்களில் கழிவுநீர் தேங்கி நோய் பரவும் அபாயம் உள்ளது. 
இப்பகுதியில் அனைத்து தெருக்களிலும் உரிய அடிப்படை வசதிகளையும் செய்து தரவேண்டும் என பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. 
எனவே, இப்பகுதியில் உடனடியாக அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT