விருதுநகர்

பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

DIN

சிவகாசியில் வியாழக்கிழமை இரவு பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சிவகாசி தில்லை நகரைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மனைவி ஜெயக்கொடி (45). இவர் தனது உறவுக்கார பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் ஜக்கம்மாள் கோயில் பின்புறம் உள்ள கவிதா நகருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் ஜெயக்கொடி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிவகாசி நகர் போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT