விருதுநகர்

பின்லாந்து கல்வி சுற்றுலாவுக்கு ராஜபாளையம் பள்ளி மாணவர் தேர்வு

DIN


பின்லாந்து நாட்டுக்கு கல்வி சுற்றுலா செல்லும் குழுவில் ராஜபாளையம் பள்ளி மாணவர் தேர்வாகியுள்ளார்.
ராஜபாளையம், மாடசாமி கோயில் தெருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 பயின்றுவரும் மாணவர் நவீன்ராஜ் திருமலாராஜ். இவர் கடந்த ஆண்டு செகந்திராபாதில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சியில் விருதுநகர் மாவட்டம் சார்பில் கலந்து கொண்டார். 
இதில், வாகன விபத்துகளை தடுக்கும் விதமாக நவீன்ராஜ் திருமலாராஜ் காட்சிப்படுத்திய படைப்பு முதல் பரிசை பெற்றது. அதைத்தொடர்ந்து அவர், பின்லாந்து நாட்டுக்கு வரும் 20 ஆம் தேதி கல்விச் சுற்றுலா செல்லும் 50 பேர் கொண்ட குழுவில் இடம் பெற்றுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்திலேயே இந்த மாணவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து மாணவர் நவீன்ராஜ் திருமலாராஜை பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பாராட்டி வாழத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT