ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 102 வது பிறந்தநாள் பொதுக் கூட்டம் மாரியம்மன் கோவில் தெருவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா முத்தையா தலைமை வகித்து பேசினார்.
கூட்டத்தில் மாநில மகளிரணி இணைச் செயலாளர் சக்தி கோதாண்டம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் த.முத்தையா, நகரச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், ஒன்றியச் செயலாளர் எஸ்.கே.மயில்சாமி, மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் மீராதனலட்சுமி, பொருளாளர் கருமாரி எஸ்.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.