விருதுநகர்

ராஜபாளையம் அருகே கல் குவாரியைமூட பொதுமக்கள் கோரிக்கை

ராஜபாளையம் அருகே உள்ள கல்குவாரியில் பாறைகளை வெட்டி எடுக்க வைக்கப்படும் வெடியால் அருகில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்படுவதால் அந்த குவாரியை மூட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

DIN


ராஜபாளையம் அருகே உள்ள கல்குவாரியில் பாறைகளை வெட்டி எடுக்க வைக்கப்படும் வெடியால் அருகில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்படுவதால் அந்த குவாரியை மூட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அயன்கொல்லங்கொண்டான் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இந்தப் பகுதியில் மொட்டமலை, கல்லமலை, திருப்பனமலை என மூன்று மலைகள் உள்ளன. அரசு சார்பில் இந்த மலைகளில் பாறைகளை வெட்டி எடுப்பதற்காக தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த குவாரி அமைந்தபோது எழுந்த எதிர்ப்பு இன்றும் தொடர்கிறது. குவாரியில் அரசு நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு மேல் அதிக அளவில் பாறைகளை வெட்டி எடுக்கின்றனராம். மேலும் இதற்காக வெடி வைக்கப்படுவதால் பூமி அதிர்வு ஏற்பட்டு குவாரி அருகே உள்ள வீடுகளில் விரிசல் ஏற்படுகிறதாம். எனவே இந்த குவாரியை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT