விருதுநகர்

பெண்ணிடம் நகை பறித்தவர் கைது

DIN

ராஜபாளையத்தில் பெண்ணிடம் நகையை பறித்துச் சென்றவரை, போலீஸார் கைது செய்தனர்.
        ராஜபாளையம் சக்கரராஜாகோட்டை பெரிய தெருவைச் சேர்ந்தவர் சங்கையா. 
  இவரது மகள் கிருஷ்ணவேணி, அப்பகுதியில் பெண்கள் அழகு நிலையம் நடத்தி வருகிறார். புதன்கிழமை மதியம் வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த மர்ம நபர் கிருஷ்ணவேணி அணிந்திருந்த 4 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளார். 
     உடனே, கிருஷ்ணவேணி சத்தம் போட்டுள்ளார். அதையடுத்து, அவரது தந்தை விரட்டிச் சென்று நகையை பறித்தவரை பிடித்தார். பின்னர், அவரை தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்ததில், தெற்கு அண்ணா நகர் முனியாண்டி கோயில் தெருவைச் சேர்ந்த சங்கிலி காளை (28) என்பது தெரியவந்தது.
 அவரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT