விருதுநகர்

அகில இந்திய பளுதூக்கும் போட்டி: அருப்புக்கோட்டை வீரருக்கு வெள்ளிப் பதக்கம்

DIN

அகில இந்திய அளவிலான பளுதூக்கும் போட்டியில் அருப்புக்கோட்டை வீரர் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.
இது குறித்து, விருதுநகர் மாவட்ட பளுதூக்குவோர் சங்கத் தலைவரும், சிவகாசி முன்னாள் நகர்மன்றத் தலைவருமான ஏ. ஞானசேகரன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் அகில இந்திய மாஸ்டர்ஸ் பளுதூக்குவோர் சம்மேளனம் சார்பில், பளுதூக்கும் போட்டிகள் கடந்த பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 ஆம் தேதி வரை நடைபெற்றது. 
இப்போட்டியில், 45 முதல் 49 வயதுக்குள்பட்டோருக்கான 89 கிலோ எடைப் பிரிவில், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கே. நல்லதம்பி, தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
தேசிய அளவில் சாதனை புரிந்துள்ள கே. நல்லதம்பி, விருதுநகர் மாவட்ட பளுதூக்குவோர் சங்கத்தைச் சேர்ந்தவராவார். இவரை, சங்கத்தின் செயல் தலைவர் ஆர். கண்ணன், பொருளாளர் எஸ். வேல்முருகன் மற்றும் வீரர்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT