ராஜபாளையம் அருகே முதுகுடியில் உள்ள சிவன் மலையில் வெள்ளிக்கிழமை பகலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
காய்ந்த சருகுகள் மற்றும் கோரை புற்களில் பற்றிய தீயானது, மலை முழுவதும் பரவி எரியத் தொடங்கியது. மலையை ஒட்டிய பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் கடைகள் உள்ளதால், அப்பகுதியினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தீயணைக்கும் படையினர் விரைந்து சென்று, சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.