விருதுநகர்

விருதுநகரில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.30 லட்சம் பறிமுதல்

DIN

மதுரை  மாவட்டம், கள்ளிக்குடி நடுத் தெருவைச் சேர்ந்தவர் ராஜா ராமகிருஷ்ணன் மகன் குருசாமி (41), முட்டை வியாபாரம்  செய்து வருகிறார். வெள்ளிக்கிழமை விருதுநகருக்கு சரக்கு வாகனத்தில் வந்த இவர், கடைகளில் வசூல் செய்த பணத்துடன் விருதுநகர் அருகே சிவகாசி சந்திப்பு சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அப்பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த நிலைக் கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த கதர் கிராமத் தொழில் வாரிய ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் போலீஸார் சரக்கு வாகனத்தை  நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த ரூ.1.30 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.  உரிய ஆவணத்தை சமர்ப்பித்து விட்டு பணத்தை பெற்றுச் செல்லுமாறு அதிகாரிகள் கூறினர். பின்னர், அத்தொகையை விருதுநகர் வட்டாட்சியர் சீனிவாசனிடம் ஒப்படைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT