விருதுநகர்

மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலை சேதம்

DIN

சிவகாசி அருகே புதன்கிழமை மாலை மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலை சேதமடைந்தது.
சிவகாசி அருகே மாரனேரியில் ஜெய்சங்கர் (55) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்நிலையில் சிவகாசிப் பகுதியில் இடி மின்னலுடன் புதன்கிழமை மாலை மழை பெய்தது. அப்போது பட்டாசு ஆலையில் பட்டாசு மற்றும் வேதியியல் பொருள்கள் வைத்திருந்த அறையில் மின்னல் தாக்கியதில், அந்த அறை எரிந்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக அந்த அறையில் ஊழியர்கள் எவரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இது குறித்து மாரனேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT