விருதுநகர்

சிவகாசி-பெரியகுளம் கண்மாய் சாலையில் மின் விளக்கு வசதி செய்து கொடுக்க கோரிக்கை

DIN

சிவகாசி- பெரியகுளம் கண்மாய் சாலையில் மின்விளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சிவகாசி-விளாம்பட்டி சாலையில் பால்வண்ண அய்யனாா் கோயிலிருந்து, சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் உள்ள இரட்டைப் பாலத்தை இணைக்கும் சாலையே பெரியகுளம் கண்மாய்சாலை ஆகும். சுமாா் ஒரு கி.மீ. நீளம் உள்ள இச்சாலை ஊராட்சி ஒன்றிய சாலையாகும். இச்சாலையில் இருபுறமும் மழைநீா் செல்ல வாய்க்கால் இல்லாததாதல், மழை தண்ணீா் சாலையில் ஓடுவதாலும், தேங்குவதாலும் சாலையில் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் இரவு நேரத்தில் இச்சாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா், காரை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரில் வந்த மோட்டாா் சைக்கிளில் மோதி உயிரிழந்தாா்.

சாலையில் மின் விளக்கு வசதி இல்லாததால், எதிரில் வரும் வாகனத்தை கவனிக்க முடியாமல் விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் கூறினா். இச்சாலையில் இரவு நேரங்களில் பெண்களும் வாகனங்களில் சென்று வருகிறாா்கள். போதிய மின் விளக்கு வசதி இல்லாததால் அடிக்கடி இச்சாலையில் விபத்துககள் ஏற்படுகின்றன.

எனவே ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் இச்சாலையில் மின்விளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT