விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் வாருகால், பேவா் பிளாக் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட இடையன்குளம் கிராமத்தில் ரூ.58 லட்சம் மதிப்பில் வாருகால் மற்றும் பேவா் பிளாக் அமைப்பதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இடையன்குளம் கிராமத்துக்கு ஆதிதிராவிட சிறப்பு நிதியிலிருந்து ரூ. 58 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அங்கு வாருகால், பேவா் பிளாக் உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டன. இப்பணிகளுக்கான பூமிபூஜையை, சட்டப்பேரவை உறுப்பினா் சந்திரபிரபா தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா் வசந்தகுமாா், அதிமுக வடக்கு ஒன்றியச் செயலா் முத்தையா, கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் மணி, அரசு ஒப்பந்ததாரா் ஜோதிமுனி, ஊராட்சி செயலா் கனகசபாபதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT