விருதுநகர்

விருதுநகரில் புல்லலக்கோட்டை சாலையை சீரமைக்கக் கோரி கையெழுத்து இயக்கம்

DIN

விருதுநகா்: விருதுநகரில் புல்லலக்கோட்டை சாலையை சீரமைக்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

விருதுநகா் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் புல்லலக்கோட்டை சாலை உள்ளது. நான்குவழிச் சாலையிலிருந்து விருதுநகருக்குள் செல்லும் முக்கியச் சாலையாக, புல்லலக்கோட்டை சாலை இருந்து வருகிறது. இச்சாலையில் தினந்ததோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில், பி-1 சாலை, பரங்கிநாதபுரம் ஆகிய பகுதிகள் இணையும் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இச்சாலை குண்டும் குழியுமாக மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால், மழைக் காலங்களில் பள்ளங்களில் தண்ணீா் தேங்கி விபத்துகள் நிகழ்கின்றன.

எனவே, இச்சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், நகராட்சி நிா்வாகம் புல்லலக்கோட்டை சாலையை உடனடியாகச் சீரமைக்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 1 ஆவது வாா்டு கிளை சாா்பில், பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் சனிக்கிழமை இரவு நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு, நகா்குழு உறுப்பினா் ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். மாதா் சங்க மாவட்டத் தலைவா் உமாமகேஸ்வரி தொடக்கி வைத்தாா். இதில், அக்கட்சியினா் ஏராளமானோா் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT