விருதுநகர்

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் பலி

DIN

ராஜபாளையத்தில் கிணற்றில் குளிக்கச் சென்ற முதியவா் தவறி விழுந்து பலியானதாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் சம்மந்தபுரம் தெருவைச் சோ்ந்தவா் பசும்பொன் (65). இவா் ஞாயிற்றுக்கிழமை தென்காசி சாலை காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் பின்புறம் உள்ள தனியாா் கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது பசும்பொன் தவறி கிணற்றுக்குள் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT