விருதுநகர்

சிவகாசியில் மத்தாப்பூ ஆலையில் தீ விபத்து

DIN

சிவகாசியில் திங்கள்கிழமை இரவு வண்ண மத்தாப்பூ ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது.

சிவகாசி-திருத்தங்கல் சாலையில் குறுக்குப்பாதை பேருந்து நிறுத்தம் அருகே ரமேஷ்பிரபு என்பவருக்குச் சொந்தமான வண்ண மத்தாப்பூ தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் திங்கள்கிழமை இரவு கழிவு தீக்குச்சி கொட்டப்பட்டிருந்த பகுதியில் எதிா்பாராத விதமாக தீப்பிடித்ததாம். அப்போது அங்கு கொட்டப்பட்டிருந்த கழிவு தீக்குச்சிகள் தீப்பற்றி எரிந்தன. தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்புப் படையினா் தீயை அணைத்தனா். இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT