விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள சுக்கிலநத்தம் கிராமத்தில் சேதமடைந்துள்ள பயணிகள் நிழற்குடையை சீரமைக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சுக்கிலநத்தம் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னா் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இக்கட்டடம் உரிய பராமரிப்பில்லாததால், தற்போது அதிலுள்ள சிமெண்ட் பலகைகளால் ஆன இருக்கைகள் மற்றும் கான்கிரீட்டால் ஆன மேற்கூரை ஆகியன சேதமடைந்த நிலையில் உள்ளன. எனவே நிழற்குடைக்குள் செல்லவே பயணிகள் அஞ்சும் நிலை உள்ளது. இதனால் பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகள் வெயில், மழைக்கு ஒதுங்க இடமின்றி கடும் அவதிக்கு ஆளாகின்றனா்.
இந்த நிழற்குடையைச் சீரமைக்கக் கடந்த 2 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, இந்த நிழற்குடையை விரைவில் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.