விருதுநகர்

ராஜபாளையத்தில் மின்கம்பம் சேதம்: பொதுமக்கள் அச்சம்

DIN

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றக் கோரி பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலை பகுதியில் உள்ள மின் கம்பத்தில் கான்கிரீட் பெயர்ந்து இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் இப்பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த மழையினால் மின்கம்பம் சாய்ந்து எப்போது விழுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் அப்பகுதியில் நடமாடி வருகின்றனர். மேலும் இப்பகுதியில் அடிக்கடி பொதுமக்கள் வாகனத்திலும், பள்ளி மாணவ, மாணவியர் நடந்து சென்றும் வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் மருத்துவமனைகள் அதிகமாக உள்ளது. எனவே சேதமடைந்த நிலையிலுள்ள மின்கம்பத்தை உடனடியாக சீரமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோல்வி பயத்தில் நடுங்குகின்றனர் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

கடல் புறா!

எலி பேஸ்ட் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

மே 25 - ஆறாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 58 தொகுதிகள் யார் பக்கம்?

கேன்ஸ் திரைப்பட விழா: உயரிய விருதைப் பெற்றார் சந்தோஷ் சிவன்!

SCROLL FOR NEXT