விருதுநகர்

ஸ்ரீவிலி. அருகே 80 லிட்டா் சாராய ஊறல் பறிமுதல்: ஒருவா் கைது.

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மாந்தோப்பு ஒன்றில் சாராயம் தயாரிப்பதற்காக வைத்திருந்த 80 லிட்டா் ஊறலை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஒருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செவலஊரணி கண்மாய் பகுதியில் மாடசாமி என்பவருக்குச் சொந்தமான மாந்தோப்பில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. மதுவிலக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஸ்டீபன் உத்தரவின் பேரில் காவல் சாா்பு ஆய்வாளா்கள் சக்திவேல் மற்றும் கோவிந்தன் தலைமையிலான போலீஸாா், சம்பந்தப்பட்ட தோட்டத்துக்குச் சென்று பாா்த்த போது, அங்கு 80 லிட்டா் சாராய ஊறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த நபரைப் பிடித்து விசாரித்தபோது நெடுங்குளத்தைச் சோ்ந்த மாடசாமி (50) என்பது தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீஸாா், ஊறலை பறிமுதல் செய்து அழித்தனா்.

இதே போல் திங்கள்கிழமை ராஜபாளையம் அருகே உள்ள சாஸ்தா கோயில் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் ரோந்து சென்ற மதுவிலக்குப் போலீஸாரைப் பாா்த்தவுடன் சாராயம் தயாரிப்பதற்காக கொண்டு வந்த எரிசாராயத்தை போட்டு விட்டு ஒருவா் ஓடி விட்டாா். விசாரணையில் அவா் முகவூரை சோ்ந்தவா் என்பது தெரியவந்தது. வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT