கொடைக்கானலில் மழை பொது மக்கள் மகிழ்ச்சி
கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை மீண்டும் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை மீண்டும் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
கொடைக்கானலில் பொதுவாக ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பருவமழை காலமாகும். ஆனால் நிகழாண்டு கடந்த 3 மாதங்களில் 20-நாள்கள் மட்டுமே பெய்தது. இந் நிலையில் கடந்த 10-நாள்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வந்தது. அதன் பின் ஒரு வாரமாக மழை பெய்யவில்லை. இதனையடுத்து செவ்வாய்க்கிழமை காலை முதல் மதியம் வரை மிதமான வெயில் நிலவியது. பிற்பகலில் தீடீரென மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.