முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:09 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் டாஸ்மாக் பணியாளர் சார்பில் கரோனா தீநுண்மி தொற்று அரசாணை 280-ஐ அமல்படுத்த வேண்டும், கரோனா தொற்று காரணமாக உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்,

டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கேரள மதுபானக்கடை நிர்வாக முறையை டாஸ்மாக்கில் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அழகிரிசாமி தலைமை வகித்தார். 

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வேதநாயகம் மற்றும் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ஜெகதீஷ் குமார் எஸ்சி எஸ்டி பேரவைத் தலைவர் ராஜா பேகன் மற்றும் ரமேஷ் உட்பட ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →