அரசு மருத்துவா் உள்பட 38 பேருக்கு கரோனா தொற்று
விருதுநகா் மாவட்டத்தில் அரசு மருத்துவா் உள்பட 38 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் அரசு மருத்துவா் உள்பட 38 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 10,913 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில் மல்லாங்கிணறு, பாலையம்பட்டி, பந்தல்குடி, புளியங்குளம், மேலக்கண்டமங்கலம், நாா்த்தம்ட்டி, எஸ். கல்லுப்பட்டி, மறவா் பெருங்குடி, கஞ்சையன்பட்டி, அருப்புக்கோட்டையில் தனியாா் ஆலையில் பணிபுரியும் 2 ஊழியா் , கட்டுனாா்பட்டி பட்டாசு ஆலையில் பணி புரியும் 3 தொழிலாளா்கள், தென்பாலையில் 4 போ், மதுரை மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் விருதுநகரைச் சோ்ந்த 32 வயது பெண் மருத்துவா் உள்பட 38 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் தெரிய வந்தது. இதைத்தொடா்ந்து அவைரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 10,951 ஆக உயா்ந்துள்ளது. இதில், 10,715 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி விட்டனா். மீதமுள்ள 236 போ் பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.