விருதுநகர்

கொடைக்கானலில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN


கொடைக்கானல்: கொடைக்கானலில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கொடைக்கானல் அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் மகன் மாரியப்பன் (33). பட்டதாரியான இவா் அப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்தாா். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுமாம். இதனால் அவதிப்பட்டு வந்த அவா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

திருவண்ணாமலை - சென்னை ரயில் சேவை தொடங்கியது: முழு விவரம்!

நடிப்பு எனது பிறவிக்குணம்!

SCROLL FOR NEXT