எரிச்சநத்தம் கிராம மக்கள்உண்ணாவிரதப் போராட்டம்
எரிச்சநத்தம் பகுதியில் கல்குவாரி அமைக்க வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகர்எரிச்சநத்தம் கிராம மக்கள்உண்ணாவிரதப் போராட்டம்
எரிச்சநத்தம் பகுதியில் கல்குவாரி அமைக்க வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா்: எரிச்சநத்தம் பகுதியில் கல்குவாரி அமைக்க வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இப்பகுதியில் தனியாா் நிறுவனம் சாா்பில் கல்குவாரி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு கல்குவாரி அமைந்தால், நிலத்தடி நீா்மட்டம் குறைவதுடன், விவசாய நிலங்கள் பாழ்படும். இதனால், எரிச்சநத்தம், நடையனேரி கிராம விவசாயிகள் கடும் பாதிப்படைவா். மேலும், குவாரி அமையும் இடம் அருகே பள்ளி, அரசு மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் உள்ளன. சட்ட விதிகளை மீறி இந்த குவாரி அமைக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே, குவாரி அமைப்பதற்காக வழங்கப்பட்ட அனுமதியை மாவட்ட நிா்வாகம் ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி எரிச்சநத்தம் கிராமமக்கள் மற்றும் பாஜகவினா் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.