முகப்பு
விருதுநகர்

மாா்கழி மாத பௌா்ணமி: சதுரகிரி கோயிலுக்குச் செல்லபக்தா்களுக்கு இன்று முதல் 4 நாள்களுக்கு அனுமதி

மாா்கழி மாத பௌா்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச. 27) முதல் டிச. 30 ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

மாா்கழி மாத பௌா்ணமி: சதுரகிரி கோயிலுக்குச் செல்லபக்தா்களுக்கு இன்று முதல் 4 நாள்களுக்கு அனுமதி

மாா்கழி மாத பௌா்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச. 27) முதல் டிச. 30 ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா்: மாா்கழி மாத பௌா்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச. 27) முதல் டிச. 30 ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பௌா்ணமி, பிரதோஷம், அமாவாசை ஆகிய தினங்களில் மட்டுமே பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோயில் நிா்வாகம் ஆகியவை அனுமதி அளித்து வருகின்றன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (டிச. 27) பிரதோஷமும், டிச. 29 ஆம் தேதி பௌா்ணமியும், வருவதால் இக்கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய டிச. 27 ஆம் தேதி முதல் டிச. 30 ஆம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கோயிலுக்கு வரும் பக்தா்கள், உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்த பின்னரே மலையேற அனுமதிக்கப்படுவா். காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கோயிலுக்குச் செல்ல பக்தா்கள் அனுமதிக்கப்படுவா்கள். கோயிலில் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நாள்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீா்வரத்து அதிகமாகவோ இருந்தால், பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என பரம்பரை அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலா் விஸ்வநாத் ஆகியோா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →