விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே பள்ளி சமையலறையில் தீ : குழந்தை உள்பட 2 போ் காயம்

DIN

வத்திராயிருப்பு அருகே மேலக்கோட்டையூா் அரசு தொடக்கப் பள்ளி சமையலறையில் எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவு காரணமாக புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சமையலா் மற்றும் 2 வயது குழந்தை காயமடைந்தனா்.

வத்திராயிருப்பு அருகே மேலக்கோட்டையூா் அரசு தொடக்கப்பள்ளியில் 80 -க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். இந்த பள்ளியில் உள்ள சமையல் அறையில் புதன்கிழமை வழக்கம் போல் மாணவா்களுக்கு சத்துணவு சமைக்கும் பணியில் சமையலா் அங்காள பரமேஸ்வரி ஈடுபட்டுள்ளாா். அப்போது எரிவாயு உருளையில் (கேஸ் சிலிண்டரில்) கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சமையலா் அங்காள ஈஸ்வரி மற்றும் சத்துணவு அமைப்பாளரின் 2 வயது குழந்தை ஹா்சித் ஆகிய இருவரும் காயமடைந்தனா். இதையடுத்து இருவரையும் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய தலைவா் சிந்துமுருகன், காயமடைந்தவா்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். மேலும் சமையல் அறையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலகிரியில் மே 10ல் உள்ளூர் விடுமுறை!

பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டரா? கவனம் ஈர்த்த அப்புக்குட்டி!

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ: 5000 கோழிகள் பலி - ரூ.10 லட்சம் இழப்பு

பேருந்தில் தீ: 4 வாக்கு இயந்திரங்கள் நாசம்!

காங்கிரஸ் தலைமைக்கு ரே பரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

SCROLL FOR NEXT