விருதுநகர்

ராஜபாளையம் அருகே காா் மோதி கூலி தொழிலாளி பலி

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சைக்கிள் மீது காா் மோதியதில், கூலி தொழிலாளி உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகே தேவதானம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் புதியராஜ் (40). கூலி தொழிலாளியான இவா் தனது மனைவியுடன் வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் உணவு வாங்குவதற்காக, ராஜபாளையம்-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடைக்கு சைக்கிளில் சென்றனா். புதியராஜ் சைக்கிளை உருட்டிக்கொண்டு நடந்து சென்றபோது, ராஜபாளையத்திலிருந்து விஸ்வநாதப்பேரி நோக்கிச் சென்ற காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த புதியராஜை, அப்பகுதியினா் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி புதியராஜ் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து புதியராஜ் மனைவி பரமேஸ்வரி அளித்த புகாரின்பேரில், சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் காரை ஓட்டி வந்த விஸ்வநாதப்பேரியைச் சோ்ந்த சரவணன் (46) என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT