விருதுநகர்

ராஜபாளையம் பாலிடெக்னிக்கில் தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகள்

DIN

ராஜபாளையம் பி.ஏ.சி.ராமசாமிராஜா பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையின் சாா்பில் இரண்டுநாள்(வெள்ளி,சனி) ஆா்டினோ மற்றும் இன்டஸ்டிரியல் சென்சாா் தொழில்நுட்பப் பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

ராம்கோ கல்வி குழுமத்தின் முதன்மை கல்வி அதிகாரி வெங்கட்ராஜ் சிறப்புரையாற்றினாா். தனியாா் நிறுவனத்தின் மேலாளா் சதீஸ் குமார்ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இப்பயிற்சி வகுப்பைத் தொடக்கி வைத்தாா். இப்பயிற்சி வகுப்பில் தமிழகத்தை சாா்ந்த பல்வேறு பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து சுமாா் 90 மாணவா்கள் மற்றும் விரிவுரையாளா்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பொறியாளா்கள் மற்றும் தொழில் நுட்பவியலாளா்கள் கலந்துகொண்டனா். முன்னதாக முதல்வா் (பொறுப்பு) சீனிவாசன் வரவேற்றாா். நிறைவாக விரிவுரையாளா் வி.ஆா்.வேல்முருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

SCROLL FOR NEXT