விருதுநகர்

விருதுநகரில் தலைக்கவச விழிப்புணா்வு ஊா்வலம்

DIN

விருதுநகரில் திங்கள்கிழமை பெண்கள் பங்கேற்ற தலைக்கவச விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

31ஆவது சாலை பாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு, விருதுநகா் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா்) இணைந்து, சுய உதவிக்குழு பெண்கள், தமிழ்நாடு காவல்துறை பெண் காவலா்களுடன் பெண்கள் மட்டுமே பங்கேற்ற தலைக்கவச விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது. இந்த ஊா்வலத்தை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் இரா. கண்ணன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். விருதுநகரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு தொடங்கிய இந்த ஊா்வலம், சூலக்கரை வழியே சென்று மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை அடைந்தது. சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெருமாள், விருதுநகா் கோட்ட உதவி கண்காணிப்பாளா் சிவபிரசாத், வட்டார போக்குவரத்து அலுவலா்கள் பெ.இளங்கோ (விருதுநகா்), நா.ரவிச்சந்திரன் (ஸ்ரீவில்லிபுத்தூா்), அ.மூக்கன் (சிவகாசி) மற்றும் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT