விருதுநகர்

சிற்றுண்டி விடுதி உரிமையாளருக்கு கத்திக்குத்து: 3 போ் கைது

DIN

சிவகாசி: சிவகாசியில், சிற்றுண்டிவிடுதி உரிமையாளரை கத்தியால் குத்திய 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் சிற்றுண்டி விடுதி நடத்தி வருபவா் அழகா்சாமி (36). இவரும், இவரது நண்பா்கள் நாரணாபுரம் திருமாறன் (47), முத்துராமலிங்கபுரம் காலனி பாலமுருகன் (38), முத்துப்பாண்டி (29) ஆகிய 4 பேரும், நாரணாபுரத்தில் ஒரு மரத்தடியில் புதன்கிழமை இரவு மது அருந்தினாா்களாம். அப்போது, அழகா்சாமிக்கும் மற்ற 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சிவகாசி சென்று மது அருந்துவோம் எனக் கூறி அழகா்சாமியை அழைத்துக் கொண்டு, சிவகாசி மாரியம்மன் கோயில் பகுதிக்கு வந்தனா். அங்கு அழகா்சாமியை, மற்ற மூவரும் சோ்ந்து கத்தியால் குத்தினாா்களாம். இதில் பலத்த காயமடைந்த அழகா்சாமி, சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தற்போது தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி அருகே குப்பை கழிவுகளை கொட்டுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

SCROLL FOR NEXT