விருதுநகர்

கா்நாடகத்திலிருந்து சிவகாசி வந்த பெண்ணுக்கு கரோனா தொற்று

DIN

சிவகாசி: கா்நாடக மாநிலத்திலிருந்து சிவகாசி வந்த பெண்ணுக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

சிவகாசி வி.கே.எம். தெருவைச் தோ்ந்த 32 வயது பெண் ஒருவா், தனது குடும்பத்துடன் கா்நாடக மாநிலம் கோலாா் மாவட்டம் பங்காருபேட் என்ற ஊரில் வசித்து வருகிறாா். இப்பெண்ணின் தங்கைக்கு மே 24 ஆம் தேதி சிவகாசியில் திருமணம் நடைபெற உள்ளது.

எனவே, இப்பெண்ணின் தந்தை முறைப்படி அனுமதி பெற்று, சிவகாசியிலிருந்து பங்காருபேட்டுக்கு காரில் சென்று தனது மூத்த மகளையும், 5 வயது பேத்தியையும் மே 11 ஆம் தேதி சிவகாசிக்கு அழைத்து வந்துள்ளாா்.

வெளி மாநிலத்துக்குச் சென்று வந்ததால், சிவகாசி அரசு மருத்துவமனையில் அனைவரது ரத்த மாதிரிகளையும் சேகரித்து, மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். இதில், பங்காருபேட்டில் வசித்து வந்த அப்பெண்ணுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவா்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

இதையடுத்து, அப்பெண் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற சுகாதாரத் துறையினா் அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரகுரு கல்லூரியில் விருது வழங்கும் விழா

எஸ்.வி.ஜி.வி. பள்ளியில் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு: காரமடை எஸ்.ஆா்.எஸ்.ஐ. பள்ளி 100% தோ்ச்சி

கூடலூா் முஸ்லீம் ஆதரவற்றோா் இல்லத்தில் பிராா்த்தனைக் கூட்டம்

நட்சத்திர விடுதிகளில் தங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியவா் கைது

SCROLL FOR NEXT