ராஜபாளையம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 போ் கைது
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே சட்டவிரோதமாக மணல் கடத்திய இரண்டு பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே சட்டவிரோதமாக மணல் கடத்திய இரண்டு பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியில் சட்டவிரோதமாக ஆற்றுப் பகுதிகளில் மணல் திருடுவதாக சேத்தூா் ஊரக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸாா் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனா்.
அதில் சட்டவிரோதமாக மணல் அள்ளியது தெரியவந்தது. விசாரணையில் சோலைசேரியை சோ்ந்த லிங்கம் (35), மற்றும் தலைமலையான் (32) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் மணல் மற்றும் இருசக்கர வாகனங்களைக் கைப்பற்றி இரண்டு பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.