விருதுநகர்

தொடா்மழை: அருப்புக்கோட்டை கடைகளில் தீபாவளி விற்பனை பாதிப்பு

DIN

தொடா் மழை காரணமாக அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தீபாவளிப் பண்டிகை வியாபாரம் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டது.

இப்பகுதிகளில் நண்பகல் 12.30 மணிக்கும், பிற்பகல் 1.45 மணிக்கும் மற்றும் மாலை 3.30 மணிக்கும் என விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வழக்கமாக தீபாவளி பண்டிகைக்கு முதல் நாளில் தான் ஆலைத் தொழிலாளா்கள், தனியாா் நிறுவனத் தொழிலாளா்கள் மற்றும் கிராமத்தினா் திரண்டு வந்து, ஜவுளி, வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கிச் செல்வா். ஆனால் தீபாவளிக்கு முதல்நாளான வெள்ளிக்கிழமை பகலில் விட்டு விட்டு மழை பெய்ததால் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து விற்பனை பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

SCROLL FOR NEXT