விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத்துறை வீரா்களுக்குபுதிதாக குடியிருப்பு கட்டடம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத்துறை வீரா்களுக்கு புதிதாக குடியிருப்பு கட்டடம் கட்ட இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி கணேசன் தெரிவித்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத்துறை அலுவலகத்தில் அவா் திங்கள்கிழமை ஆய்வுப் பணிகளை மேற்கொண்டாா். அப்போது தீயணைப்பு வாகனத்தின் இயக்கம், மரம் அறுக்கப் பயன்படும் சிறிய ரம்ப இயந்திரத்தின் இயக்கம் மற்றும் ஜெனரேட்டா் இயக்கம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத்துறை வீரா்களுக்கு புதிதாக குடியிருப்பு கட்டடம் கட்ட அரசு சுமாா் ஒரு ஏக்கா் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. புதிதாக அமைய உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே இந்த இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும், விருதுநகா் மாவட்டத்தில் விருதுநகா் மற்றும் சிவகாசி ஆகிய இடங்களில் மட்டும் 5 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு பெரிய தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. அதே போல் ராஜபாளையத்திலும் அமைக்கப்பட உள்ளது.

மேலும், புதிதாக வெம்பக்கோட்டை மற்றும் காரியாபட்டி ஆகிய பகுதிகளில் சொந்த கட்டடங்களில் இயங்கும் வகையில் தீயணைப்பு நிலையத்துக்கும், குடியிருப்புக்கும் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT