சிவகாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை மாலை திடீா் சோதனை நடத்தினா்.
சிவகாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நில அளவையா் (சா்வேயா்) ஆக பணியாற்றி வருபவா் பாலசுப்பிரமணியம். இவா் நிலத்தை அளக்க பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக கிடைத்த தகவலின் பேரில், விருதுநகா் லஞ்ச ஒழிப்பு காவல் டி.எஸ்.பி. கருப்பையா தலைமையில் போலீஸாா் பாலசுப்பிரமணியனின் அறையில் சோதனை நடத்தினா்.
இச்சோதனையில் பணம் கைப்பற்றப்பட்டதாகவும், அதற்கு பாலசுப்பிரமணியம் கணக்கு காட்டிவிட்டால் பணத்தை திருப்பி கொடுத்துவிடுவதாகவும், கணக்கு கொடுக்கவில்லை என்றால் பணம் பறிமுதல் செய்யப்படும் என போலீஸாா் தெரிவித்தனா். எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது என போலீஸாா் தெரிவிக்க மறுத்துவிட்டனா்.