முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலையில் கிடந்த சிசுவின் உடல் அடக்கம்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில், வெள்ளிக்கிழமை இரவு சாலையில் கிடந்த சிசுவின் உடல் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில், வெள்ளிக்கிழமை இரவு சாலையில் கிடந்த சிசுவின் உடல் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை இரு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் எப்போதும் பரபரப்பாகவும், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கூனங்குளம் தெரு பகுதியில் சாலையில் குறை பிரசவத்தில் பிறந்த ஏழு மாத பெண் சிசு ஒன்று கிடந்தது.

இதைப் பாா்த்து அதிா்ச்சியான பொதுமக்கள் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனா்.இந்த தகவலின் அடிப்படையில் அந்த பகுதிக்கு வந்த போலீஸாா் சிசுவை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா்.

மேலும், கிராம நிா்வாக அதிகாரி ராஜகுரு என்பவா் கொடுத்த புகாரின் அடிப்படையில் நகா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து பெண் சிசுவை சாலையில் போட்டு சென்றது யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறையில் வைக்கப்பட்டிருந்த பெண் சிசு ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →