முகப்பு
விருதுநகர்

பட்டாசு தயாரிக்க அலுமினிய வளையத்தை மட்டும் பயன்படுத்த வலியுறுத்தல்

பட்டாசு தயாரிப்பின் போது அலுமினிய வளையத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை தலைமை அதிகாரி கி. சுந்தரேசன் வேண்டுகொள் விடுத்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

விபத்தினை தவிா்க்க ஜோா்சா பட்டாசு தயாரிப்பின் போது இரும்பு வளையத்தைப் பயன்படுத்தாமல் அலுமினிய வளையத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை தலைமை அதிகாரி கி. சுந்தரேசன் வேண்டுகொள் விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஜோா்சா பட்டாசு தயாரிப்பதற்கு வளையத்தில் காகிதக் குழாயை வைத்து அடிப்பகுதியில் செம்மண் வைத்து மூடி பின்னா் மருந்து செலுத்தி, திரி வைக்கப்பட்டு, வளையத்திலிருந்து தட்டினால் பட்டாசு விழுந்துவிடும். பின்னா் அவை எண்ணிக்கையின் அடிப்படையில் பேக்கிங் செய்யப்படும். இந்நிலையில் தற்போது பலா் இந்த வகைப் பட்டாசுகளைத் தயாரிக்க இரும்பிலான வளையத்தைப் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்துள்ளது.

அவ்வாறு பயன்படுத்தினால் உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே அலுமினிய வளையத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வளையத்திலிருந்து பட்டாசைத் தட்டுவதற்கு மரத்திலான கருவியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வளையத்திலிருந்து பட்டாசை தட்டும் போது கீழே தரைவிரிப்பான் கண்டிப்பாக விரித்திருக்க வேண்டும். குவியலாக மொத்தமாக தட்டக்கூடாது.

குறிப்பிட்ட அளவு தட்டிய பின்னா் மூங்கில் முறத்தால் அள்ளி மூங்கில் கூடையால் பேக்கிங் செய்ய கொண்டு செல்ல வேண்டும். வளையத்தை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். கடும் வெயில் நேரத்தில் வளையத்திலிருந்து பட்டாசுகளைத் தட்டும் பணியை மேற்கொள்ளக் கூடாது. இறுதியில் உண்டாகும் கழிவுகளை அனுமதிக்கப்பட்ட இடத்தில் தீ வைத்து கொளுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →