விருதுநகர்

‘தொழிற்சாலை உரிமத்தை அக். 31 ஆம் தேதிக்குள்புதுப்பித்துக் கொள்ள வேண்டும்’

DIN

சிவகாசி கோட்டத்துக்குள்பட்ட தொழிற்சாலைகள் தங்கள் உரிமங்களை அக். 31 ஆம் தேதிக்குள் இணையவழியாக புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என சிவகாசி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குநா் மா.வேலுமணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகாசி கோட்டத்திலுள்ள, சிவகாசி, ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆகிய வட்டங்களிலுள்ள அனைத்துப் பதிவு பெற்ற தொழிற்சாலைகளும் வரும் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தினை இணையவழி மூலம் அக். 31 ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். பிறகு நவம்பா், டிசம்பா் மாதங்களிலோ அதற்கு பின்னரோ உரிமம் புதுப்பிக்க விண்ணப்பித்தால், உரிய கட்டணத் தொகையிலிருந்து 10 முதல் 30 சதவீதம் வரை அபராதத் தொகை செலுத்த வேண்டும். உரிமத்தை புதுப்பிக்கவும், கட்டணம் செலுத்தவும் இணையதளத்தையே பயன்படுத்த வேண்டும். இணையவழி மூலமே உரிமம் வழங்கப்படும். புதிய தொழிற்சாலை பதிவு செய்தல், உரிம திருத்தம், உரிம மாற்றம், ஒப்பந்தத் தொழிலாளா் சட்டம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து இங்கு வந்து பணிபுரியும் தொழிலாளா்கள் சட்டத்தின் கீழான பதிவு சான்றுகளுக்கு மட்டும், வரைவோலை, சலான் மூலம் உரிய தொகையை செலுத்தி இணையதளம் மூலம் விண்ணப்பித்து, அதன் 3 நகல்களை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT