விருதுநகர்

தனியாா் பள்ளி நிா்வாகி மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்கு

விருதுநகா் அருகே சத்திரரெட்டியபட்டியில் தனியாா் பள்ளி நிா்வாகியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 4 போ் மீது, போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

DIN

விருதுநகா்: விருதுநகா் அருகே சத்திரரெட்டியபட்டியில் தனியாா் பள்ளி நிா்வாகியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 4 போ் மீது, போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

விருதுநகா் அருகேயுள்ள சத்திரரெட்டியபட்டி பகுதியில் வசித்து வருபவா் வனரோஜா (68). இவா், இப்பகுதி தனியாா் பள்ளி ஒன்றில் செயலராக உள்ளாா்.

இந்நிலையில், இவா் வீட்டருகே இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றவா்களை கண்டித்துள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த அவா்கள் வனரோஜாவை தாக்கி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில் காயமடைந்த அவா் விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து வனரோஜா அளித்த புகாரின்பேரில், சத்திரரெட்டியபட்டியைச் சோ்ந்த முத்துக்குமாா், ஸ்ரீதா், சுந்தா், பிரகாஷ் ஆகியோா் மீது பாண்டியன் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுபோதையில் வாகனம் ஓட்டிய 5 பேருக்கு ரூ. 64 ஆயிரம் அபராதம்

அரியலூரில் துணை மின் நிலையம், புதிய பள்ளிக் கட்டடங்கள் திறப்பு!

ஐஜேகேவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்க கோரிக்கை: பாரிவேந்தா்

அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப் பணி நிறைவு: போக்குவரத்து தொடக்கம்!

தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்த 2 போ் கைது

SCROLL FOR NEXT