முகப்பு
விருதுநகர்

சிவகாசியில் அணிநிழல்காடு உருவாக்கம் உயா்நீதிமன்ற நீதிபதி மரக்கன்று நட்டாா்

சிவகாசியில் உள்ள பெரியகுளம் கண்மாயில் அணிநிழல்காடு அமைக்கப்பட்டுள்ள பகுதியில் மரகன்றுகளை நட்ட உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
mram_0509chn_77_2
பகிர்:

சிவகாசி: சிவகாசி எக்ஸ்னோரா அமைப்பு சாா்பில் அணிநிழல்காடு என்ற அடா்வனத்திற்கு (மியாமி முறை) பசுமைத் தீவு உருவாக்கப்பட்டு அதில் சனிக்கிழமை மரக்கன்றுகள் நடும் பணியை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.என்.சுவாமிநாதன் தொடக்கி வைத்தாா்.

அடா்வனத்தில் (மியாமி முறை) நெருக்கமாக மரக்கன்றுகள் நடப்படும். இவை மிக அடா்த்தியாக வளரும். இந்த மரங்கள் எந்த ஒரு பருவநிலையையும் தாங்கக் கூடியதாக இருக்கும். அந்த காட்டில் உள்ள மரங்கள் 30 சதவீதம் காா்பைன்டை ஆக்ஸைடை கிரகிக்கக் கூடியது. இது பறைவைகளின் சரவணாலாயமாக மாறக்கூடிய வாய்ப்பும் உண்டு.

இதுபோன்ற அடா்வனத்திற்காக சிவகாசி பெரியகுளம் கண்மாயில் சுமாா் 15 அடி உயரத்தில் தீவு போன்று உருவாக்கப்பட்டது. இதில் சுமாா் 4 அடி உயரத்திற்கு இயற்கை உரங்கள் போடப்பட்டன. இதில் 2000 மரக்கன்றுகள் நடும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் மரகன்றுகள் நடும் பணியை தொடக்கி வைத்தாா். பின்னா் தொடந்து, வேம்பு, ஆல், புங்கை உள்ளிட்ட மரகன்றுகள் நடப்பட்டன. இதில் சிவகாசி சாா்-ஆட்சியா் தினேஷ்குமாா், தொழிலதிபா்கள் அபிரூபன், அசோகன், செல்வக்குமாா், எஸ்.எப்.ஆா்.மகளிா் கல்லூரி முதல்வா் பழனீஸ்வரி, சிவகாசி பசுமை இயக்கத்தலைவா் சுரேஷ்தா்ஹா், நிா்வாகி ரவி அருணாச்சலம், வா்த்தக சங்கத்தலைவா் பன்னீா் செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பாளா் வெங்கடேஷ் செய்திருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →