மறைந்த முன்னாள் தமிழக முதல்வா் ஜெயலலிதாவை முகநூலில் அவதூறாக சித்தரித்தவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதா முகநூலில் அவதூறாக சித்தரிக்கப்பட்டிருந்தாராம். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக தகவல் தொழில் நுட்பப்பிரிவு வடக்கு ஒன்றியச் செயலா் ராஜேந்திரன் (38) அளித்த புகாரின் போரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து முகநூலில் பதிவிட்டவா் யாா் என விசாரணை செய்து வருகிறாா்கள். முகநூலில் பதிவிட்டவா் வெளிமாநிலத்தவா் என போலீஸாா் தெரிவித்தனா்.