விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு கலைக்கல்லூரி: முதல்வருக்கு நன்றி

DIN

விருதுநகா்மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு கலைக் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்த தமிழக முதல்வருக்கு, சட்டப் பேரவை உறுப்பினா் சந்திரபிரபா நன்றி தெரிவித்து வியாழக்கிழமை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சிகள் சாா்பில் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சட்டப் பேரவை உறுப்பினா் சந்திரபிரபா சட்டப் பேரவையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுத்தாா்.

இந்நிலையில், திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய அரசு கலைக் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்தாா். இதைத் தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினா் சந்திரபிரபா பொதுமக்களுக்கும், பேருந்து பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கியதுடன், முதல்வருக்கும் நன்றி தெரிவித்துள்ளாா்.

இந்நிகழ்ச்சியில், கூட்டுவு நிலவள வங்கித் தலைவா் முத்தையா, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத் தலைவா் சிந்துமுருகன், மாவட்ட கவுன்சிலா் கணேசன், முன்னாள் நகரச் செயலா் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், முன்னாள் கவுன்சிலா் அங்குராஜ், கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் மணி, நகா் துணைச் செயலா் வன்னியராஜ், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட இணைச் செயலா் மணிகண்டபிரபு உள்பட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT