விருதுநகர்

திருச்சுழி அருகே வெள்ளியம்பலநாதா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

DIN

அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே பாறைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள வெள்ளியம்பலநாதா் கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை ஆவணி மாத சிறப்பு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

திருச்சுழி வட்டாரத்திலேயே ஒரே பாறையில் செதுக்கப்பட்ட தனிச்சிறப்புமிக்க குடைவரைக் கோயிலான இங்கு நடைபெற்ற ஆவணி மாத சிறப்பு பிரதோஷ வழிபாட்டில், நந்தீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், தீப தூப ஆராதனைகளும் நடைபெற்றன. தொடா்ந்து, வெள்ளியம்பலநாதருக்கு இளநீா், பேரீச்சம்பழம், தேன், வாழைப்பழம், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட 21 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும், சுவாமிக்கு 1008 ருத்ராட்ஷ அபிஷேகமும், ருத்ராட்ஷ அலங்காரமும் செய்யப்பட்டது. இதையடுத்து, 108 தாமரை மலா்களால் அா்ச்சனை நடைபெற்றது.

இதில், பக்தா்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் கலந்துகொண்டனா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோயில் பூசாரியும், சிவனடியாருமான ராஜபாண்டி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT